ஆர்கானிக் உணவு பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை....

ஆர்கானிக் அரிசி வகைகள், அவல், அப்பளம், இயற்கை உரங்கள், விதைகள் ஆகியவை கிடைக்கும்.
நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கம் என்பது, விவசாயிகள், சுய உதவி குழுக்கள் சேர்ந்து நடத்தும் ஆர்கானிக் உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை அமைப்பாகும்.
சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவு பொருள்களை (certified organic food products) இவர்கள் தயாரிக்கிறார்கள். இவர்களின் முக்கிய விளைபொருள் ஆர்கானிக் அரிசியாகும்.
இந்த அமைப்பில் இணைந்துள்ள சுய உதவி குழு பெண்கள் ஆர்கானிக் அரிசி மாவு, ஆர்கானிக் அப்பளம், ஆர்கானிக் புட்டு மாவு போன்ற பொருள்களை தயாரிக்கிறார்கள். Centre for Indian Knowledge Systems (CIKS) என்ற அமைப்பு இவர்களுக்கு உதவி வருகிறது. NABARD வங்கியின் கடன் உதவியுடன் இவர்களது ஆர்கானிக் முயற்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆர்கானிக் நெல்விதை விற்பனை இவர்களின் சிறப்பான முயற்சிகளில் ஒன்று.
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் அல்லாது சென்னை, சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதிகளில் இவர்களது பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
வீட்டு தோட்டக் கலை பயிற்சி

இயற்கை உரம், மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பொருள்கள், பாரம்பரிய காய்கனிகள், விதைகள், சிறுதானிய உணவு ஆகியவை பற்றிய பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி கட்டணம் இல்லை.
குரோம்பேட்டை ராகவா நகரில் உள்ள BBR நலசங்கத்தில் இந்த பயிற்சி நடைபெறும். தொடர்புக்கு-78120 99366.
No comments:
Post a Comment