Monday 28 April 2014

தூதுவளை அடை

தூதுவளை அடை
தூதுவளை 



தேவையான பொருள்கள் 

தூதுவளை இலை - 1 பிடி  (ஆய்ந்து சுத்தம் செய்தது)

புழுங்கல் அரிசி - 1 கப் 
பச்சை அரிசி - 1 பிடி 

துவரம் பருப்பு -1/2 கப்  
உளுத்தம் பருப்பு -1/4 கப் 
கடலை பருப்பு  -1/4 கப் 
பாசி பருப்பு -2 ஸ்பூன் 

நெய்  - அடை வார்க்க 

பெருங்காயம் - சிறிது 

வர மிளகாய் -10 to 12

உப்பு - தேவைக்கு 



தூதுவளை இலை 
தூதுவளை அடை......

செய்வது எப்படி?


அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகப் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் வற்றல் மிளகாய், கட்டிப் பெருங்காயம் இவற்றை தனித் தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

தூதுவளை இலைகளை கழுவி, சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.


தூதுவளை இலைகளை ஆய்ந்து எடுப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. தூதுவளை காம்பு, இலைகள் முழுதும் முள் இருக்கும். இலைகளின் இரண்டு பக்கமும் முள் இருக்கும்.

கத்தரிக்கோல் வைத்து இலைகளை வெட்டி எடுக்கலாம். பிறகு இலையின் இரண்டு பக்கமும் உள்ள முட்களை ஜாக்கிரதையாக வெட்ட வேண்டும். 

அடை மாவுக்கு, வற்றல் மிளகாய்களை உப்பு பெருங்காயத்துடன் நைசாக அரைக்க வேண்டும். அரிசி, பருப்பு வகைகளை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அப்படியில்லாமல் நைசாக அரைத்தால் அது பருப்பு தோசையாகி விடும்.

தூதுவளை அடை மாவு 
கைப்பிடி அளவு ஊறிய அரிசி, பருப்பு கலவையை எடுத்து, உப்பு வற்றல் மிளகாயோடு சேர்த்து அரைத்தால் மிளகாய் நன்கு மசிந்து விடும்.

பிறகு மீதம் உள்ள அரிசி, பருப்பு கலவை, தூதுவளை இலைகளை சேர்த்து  கொர கொரப்பாக அரைக்கலாம்.



இப்போது தூதுவளை அடை மாவு தயார்.




அடை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் சிறிது நெய் விட்டு, ஒரு கரண்டிஅடை மாவை தடியாக ஊற்றி வேக வைக்கவும்.


நன்கு வெந்ததும், திருப்பிப் போட்டு மறுபடியும் நன்கு வேக வைக்கவும்.

தூதுவளை அடை தயார்.

தூதுவளை நெஞ்சு சளிக்கு நல்லது. வழக்கமான அடையிலிருந்து ஒரு மாறுபட்ட சுவையை தரும். மூலிகை என்றால் கசப்பாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். நிறைய பருப்பு, மிளகாய் சேர்த்த அடை போன்ற டிபன் வகைகளில் மூலிகைகளை சேர்த்தால் கசப்பு தெரியாது.

தோசை மாவில் மூலிகைகளை சேர்க்கும்போது மிளகு, சீரகம் சேர்த்தால் கசப்பு தெரியாது.

முருங்கை கீரை அடையில் போடுவதுபோல் இலைகளை அப்படியே போடாமல் அரைத்து சேர்ப்பதும் கசப்பு சுவையை மாற்றுவதற்கே.

1 comment:

Sundarramg said...

தூது வருமோ....தூது வருமோ....என் பசியை தணிக்க தூது வருமோ....சளிக்கு மருந்தாய் தூது வருமோ....ஹா...ஹா...ஹா....எப்படி என் கவிதை? எல்லாம் உங்கள் தூதுவளை செய்த மாயம்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...