Saturday 24 May 2014

பலதானிய தோசை

பலதானிய தோசை 


என் நண்பர் அச்சுந்தன் வயல் திரு. கண்ணன் அவர்களுக்கு மீண்டும் நன்றி. கேழ்வரகு (ராகி), கம்பு, நாட்டு சோளம் ஆகிய தானியங்களை சேர்த்து செய்யக் கூடிய சில ரெசிபிகளை சொன்னார். தன வயலில் விளைந்த தானியங்களையும் தந்தார்.



மூன்று சிறுதானியங்களையும் ஏறக்குறைய சம அளவு எடுத்து சிறிது நேரம் வெய்யிலில் காய வைத்தேன். அரைக்க எளிதாக இருக்கும். அதற்காகத்தான் இந்த வெய்யில் காய்ச்சல்.








காய்ந்த தானியங்களை மாவு மில்லில் அரைத்து வாங்கினேன்.


இந்த மாவில் பலவிதமான ரெசிபிகள் செய்யலாம். அரிசி மாவு, அதைவிட குறிப்பாக கோதுமை மாவு பயன்படுத்த வேண்டிய பண்டங்களில் எல்லாம் இந்த பலதானிய மாவு பயன்படுத்தலாம்.





இதோ முதலில் பலதானிய தோசை. 


பலதானிய மாவு 

நாம் அரிசி உபயோகித்து தோசை வார்க்கும்போது உளுந்து பயன்படுத்துவோம். கோதுமை தோசைக்கு உளுந்து தேவையில்லை. பலதானிய தோசைக்கும் உளுந்து தேவையில்லை. வழக்கமான் தோசை, கோதுமை தோசை சாப்பிட்ட நாக்குகளுக்கு இந்த பலதானிய தோசை ஒரு மாறுதலான, நல்ல ருசியை தரும். Gluten இல்லாததால், செரிமான பிரச்சினைகளும் இருக்காது.
கேழ்வரகு (Finger Millet-Ragi), கம்பு (Pearl Millet), நாட்டு சோளம் (Jowar) ஆகிய சிறுதானியங்களை சம அளவில் சேர்த்து அரைத்த மாவு - 1 கப் 

தண்ணீர்  - தோசை மாவு பதத்திற்கு கரைக்கும் அளவு தண்ணீர். 1 டம்ப்ளருக்கு சற்று அதிகமான தண்ணீர் தேவைப் படும். 

மிளகு, சீரக பொடி - 1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1

கருவேப்பிலை - சிறிது 

பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க 

உப்பு - தேவைக்கு 

நல்லெண்ணெய் - தோசை வார்க்க 




பலதானிய மாவை, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து  தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 


பலதானிய தோசை மாவு - கப் 
மிளகு, சீரக பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். 

கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பை தாளித்து கொட்டி, நன்கு கலந்து, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். 

ஊற வைக்காமல் உடனே தோசை வார்க்க வேண்டும் என்றால் சிறிது மோர் விட்டு கரைத்து உடனே தோசை வார்க்கலாம்.


பலதானிய தோசை மாவில் உப்பு சேர்த்து ............................
மோர் விட்டு கரைத்து அல்லது தண்ணீரில் கரைத்து மூன்று மணி நேரம் ஊறிய பலதானிய தோசை மாவை............





 வழக்கமான தோசை ஊற்றுவதுபோல் ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்க வேண்டியதுதான்.


பலதானிய தோசை ரெடி.





தண்ணீர் விட்டு கரைக்கவும் 


தோசை மாவு பதத்தில் கரைக்கவும் 
மிளகு, சீரக தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும் 
மூன்று மணி நேரம் மாவு ஊறிய பின், தோசை வார்க்கவும். மோர் சேர்த்து கரைத்தால் ஊற வைக்க தேவையில்லை 
வெந்ததும் திருப்பி போட்டு..............
நன்கு வேக வைத்தால், பலதானிய தோசை ரெடி 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...