Sunday 22 June 2014

சிறுதானிய ரொட்டி

சிறுதானிய ரொட்டி 



பலதானிய மாவு (கேழ்வரகு, கம்பு, நாட்டு சோளம் சேர்த்து அரைத்த மாவு)- ஒரு கப் 

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - ரொட்டி சுட 

தண்ணீர் - மாவு பிசைய 

பலதானிய மாவு 












ஒரு கப் சிறு (பல) தானிய மாவு எடுத்து, 2 ஸ்பூன் எண்ணெய், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். 2 மணி நேரம் ஊற வைக்கவும்.






மாவை கிள்ளி , சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 














உருண்டையை கையில் எடுத்து, சிறிது எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். 













தட்டிய மாவை கல்லில் போட்டு, நிதானமான தீயில் வேக வைக்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி............................












இரண்டு பக்கமும் சிவக்கும் வரை திருப்பி போட்டு வேக வைக்கவும். 








சிறுதானிய ரொட்டி ரெடி 

சப்பாத்திக்கு செய்யும் எந்த சைட் டிஷ்ஷும் இந்த சிறுதானிய ரொட்டிக்கு தொட்டு சாப்பிட ஏற்றதே.

கோதுமை மாவில் இருக்கும் பிசுக்கு , சிறுதானிய மாவில் இருக்காது. எனவே ரொட்டி தட்டும்போது எளிதில் உடைந்து விடும். சிறு சிறு ரொட்டிகளாக தட்டினால் இந்த பிரச்சினை இருக்காது.

விருப்பப் பட்டால் சிறிது கோதுமை மாவு சேர்த்தும் பிசையலாம்.

கோதுமை மாவு நம் சமையலில் அதிகம் சேர்க்கப் படும் பொருள் ஆகி விட்டது. அதற்கு மாற்றாகத்தான் இந்த சிறுதானிய ரொட்டி ரெசிபி. கோதுமை, அரிசி மாவுகளையே சாப்பிட்டு வரும் நமக்கு, நல்ல மாற்றுச் சுவையாக இருக்கும் இந்த சிறுதானிய ரொட்டி.



கோதுமை ஒவ்வாமை 


சிலருக்கு கோதுமையில் உள்ள gluten (என்ற புரதச் சத்து ) ஒவ்வாமை இருக்கும்.  அமெரிக்காவில் இந்த ஒவ்வாமை பிரச்சினை அதிகம். அங்கே உணவு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுத்தக் கூடிய உணவு வரிசையில், முதல் 8 இடத்தில் ஓரிடம் பிடித்திருக்கிறது இந்த gluten allergy. இது celiac disease என்றும் அழைக்கப் படுகிறது. 

இது தவிர, கோதுமை ஒவ்வாமை (Wheat Allergy )யும் நிறைய பேரை பாதிக்கிறது. கோதுமை ஒவ்வாமை, celiac disease எனப்படும் gluten allergy ................இவை இரண்டுமே கோதுமை உணவால் ஏற்படும் இருவேறு உடல்நலப் பிரச்சினைகள்.

Gluten Allergy உள்ளவர்களுக்கு, கோதுமை மாவை முகர்ந்தால் கூட ஒத்துக் கொள்ளாது என்கிறார்கள்.

இந்த நோய்க்கு ஒரே தடுப்பு மருந்து கோதுமை உணவுகளை தவிர்ப்பதுதான்.

நம்மூரிலும் இந்த பிரச்சினை இப்போது பரவலாகி வருவதாக கூறப் படுகிறது. அவர்களுக்கு சிறந்த மாற்று உணவு இந்த சிறுதானிய ரொட்டி.

எனவேதான் சிறிது கூட கோதுமை மாவு சேர்க்காமல் இந்த ரெசிபி கொடுத்துள்ளேன்.

Sunday 8 June 2014

சிறுதானிய இனிப்பு ரொட்டி

சிறுதானிய இனிப்பு ரொட்டி 

பலதானிய மாவு (கம்பு+கேழ்வரகு+நாட்டு சோளம்)- 1 கப் 
வெல்லம் - 1/2 கப் 

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் 


ஏலக்காய் - சிறிது 

நெய் - ரொட்டியை சுட்டு எடுக்க 




பலதானிய மாவு (3 சிறுதானியங்கள் சேர்த்து அரைத்த மாவு)+வெல்லம்+தேங்காய்+ஏலக்காய்+நெய் 






வாணலியில்  தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்ததும் வெல்லத் தூளை போட்டு, வெல்லப் பாகு காய்ச்சவும். கம்பி பாகு பதமோ, பாகு முறுகவோ தேவையில்லை. கம்பி பாகு பதத்திற்கு சற்று முன்னதாக காய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும். வெல்லம் தண்ணீரில் கரைந்து சற்று இறுக வேண்டும். அவ்வளவுதான்.

துருவிய தேங்காயை சேர்க்கவும். ஏலக்காய் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும்.




ஓரளவு  வெல்லப்பாகு கெட்டியானதும் மாவை சேர்க்கவும்.  கை விடாமல் கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும்  இறக்கி  வைத்து............................. 





ஆறியதும் சிறிது மாவை கையில் எடுத்து நன்கு உருட்டி சின்ன biscuit போல் தட்டி கல்லில் போடவும். 





சுற்றி சிறிது நெய் விட்டு வேக வைக்கவும். 

சிறுதானிய இனிப்பு ரொட்டி ரெடி 

பொன்னிறமாக சிவந்ததும் திருப்பி போடவும். சூடாக பரிமாறவும்.


இதுவரை நான் சுவைத்த சிறுதானிய சமையல் வகைகளில், இந்த சிறுதானிய இனிப்பு ரொட்டியின்  சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சாப்பிட சற்றே மொறுமொறுப்பாக இருக்கும். குக்கீஸ் போன்றதொரு சுவை. குக்கீஸை விட ஆரோக்கியமான உணவு....இந்த சிறுதானிய இனிப்பு ரொட்டி.

Sunday 1 June 2014

பம்ப்ளிமாஸ் ஜூஸ்

பம்ப்ளிமாஸ் ஜூஸ் 

பம்ப்ளிமாஸ் பழம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிட்ரஸ் வகையை சார்ந்த பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சுவை. ஆனால் எப்படி சாத்துக்குடிக்கும், ஆரஞ்சுக்கும் சுவை வித்தியாசம் உள்ளதோ, அதுபோன்றே பம்ப்ளிமாஸ் பழத்திற்கென்று ஒரு தனித்துவமான சுவை உண்டு. பர்மாவில் இந்த பழம் அதிகம் விளைகிறது. நம்மூரிலும் திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் ஒருகாலத்தில் அதிகம் விளைந்தது. இப்போது பம்ப்ளிமாஸ் பழத்தை அதிகம் காண முடிவதில்லை. சென்னையில் தேடினால் எப்போதாவது, ஏதாவது ஒரு பழக் கடையில் கிடைக்கிறது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் அடிக்கடி சுவைத்த பழம் பம்ப்ளிமாஸ். சிறுவயதில் பதிந்த நினைவோ என்னவோ, இன்றும் நான் பம்ப்ளிமாஸ் பழத்தைத் தேடி அலைகிறேன்.


நண்பர் மீனாட்சி சுந்தரம் 
நன்கு கனிந்த பம்ப்ளிமாஸ் பழத்தை சாப்பிட வேண்டும். 

இல்லாவிட்டால் ..............

"இந்த பழத்தை பற்றியா இப்படி புகழ்ந்தாய்? "

என்பீர்கள்.

கனியாத பம்ப்ளிமாஸ், புளிப்பும்.... துவர்ப்புமாய் இருக்கும்.

மரத்தில் ஓரளவு முற்றிய பிறகு பறித்து, பழ வாசனை வரும் வரை கனிய விட்டு பின் சாப்பிட வேண்டும். ஒருவாரம் வரை கூட காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்த பழத்தை பற்றி தெரிந்தவர்கள் அதிகம் இல்லாததால், அதி அற்புத சுவை கொண்ட இந்த பழத்தை நாம் ஏறக்குறைய இழந்து விட்டோம்.

என் பள்ளிப் பருவத்தில் திருச்சி தில்லை நகரில் இருந்தேன். அப்போது சோமரசம்பேட்டை கிராமத்தில் இருந்து தினமும் ஒரு கூடையில் காய்கறி சுமந்து வரும் பாட்டி, பம்ப்ளிமாஸ் பழமும் கொண்டு வருவார். சரியாக கனிந்த பழமாக! 





பல வருடங்களுக்கு பின், திருவையாறில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டு கொல்லையில் பம்ப்ளிமாஸ் பழ மரம் வைத்திருந்தார்கள். அப்போது சாப்பிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் பம்ப்ளிமாஸ் என் பாதையில் குறுக்கிட்டது.

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் உள்ள தாத்தாச்சாரியார் மாம்பழ தோப்பிற்கு சென்றிருந்தேன். எனது நெருங்கிய நண்பர் மீனாட்சி சுந்தரம் என்னை அங்கே அழைத்துச் சென்றார். நான் போனது என்னவோ இமாம் பசந்து பழம் வாங்க. இமாம் பசந்து மாம்பழம் ஸ்ரீமான் தாத்தாச்சாரியாரின் கண்டு பிடிப்பு. திருச்சி செல்பவர்கள் கட்டாயம் இமாம் பசந்து சாப்பிட்டே தீர வேண்டும். 


அங்கு சென்றவுடன் பம்ப்ளிமாஸ் மரத்தை பார்த்தேன். இமாம் பசந்தெல்லாம் மறந்து விட்டது. தோட்டக் காரரை பற்றிக் கொண்டு துரட்டியோடு சென்றுவிட்டேன்.



பழுக்கும் வரை காத்திருந்து சுவைத்தேன். மீதமிருந்த பழத்தில் ஜூஸ் செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. 

பம்ப்ளிமாஸ் சாத்துக்குடி போல பல மடங்கு பெரிதாக இருக்கும். கிடாரங்கா அளவில் இருக்கும் என்று சொல்லலாம். குண்டாக இருக்கும் நபர்களை பார்த்து " என்ன பம்ப்ளிமாஸ் மாதிரி இருக்கிறாய்? " என்பார்கள். நன்கு கனிந்த பம்ப்ளிமாஸ் பழச் சுளை, பிங்க் நிறத்தில் இருக்கும். முத்துக்கள் பெரிதாக இருக்கும்.



சாத்துக் குடியை உரிப்பது போல் உரித்து சுளைகளை தனியாக எடுக்க வேண்டும். சாத்துக் குடியில் சுளைகளுக்கு மேல் பகுதியில், பஞ்சு போன்ற சிறுதோல் இருக்கும். பம்ப்ளிமாஸ் பழத்தில் பஞ்சு போன்ற பகுதி அதிகமாக இருக்கும். பழத்தின் கால் வாசி பகுதியை இந்த பஞ்சுபோன்ற தோல் நிரப்பி இருக்கும்.

இனி....பம்ப்ளிமாஸ் ஜூஸ்....


பம்ப்ளிமாஸ் பழம் - 1
தேன் - தேவைக்கேற்ப 

பொதுவாக பழச் சாறு தயாரிக்கும் போது அதிக சர்க்கரை, பழ எசன்ஸ் என்று சேர்த்து, பழத்தின் சுவையை அமுக்கி விடுவார்கள். வெள்ளை சர்க்கரை நல்லதல்ல. அதன் சுவையே ஓங்கி நிற்கும். ஆகவேதான் தேன் மட்டும் சேர்த்து பம்ப்ளிமாஸ் ஜூஸ் செய்தேன். 




பழங்களை அப்படியே சாப்பிட்டால்தான் அவற்றில் உள்ள நார்ச் சத்து சிதையாமல் இருக்கும். குழந்தைகளுக்கு பழச் சாறு கொடுத்து பழக்கினால் பழங்களை சாப்பிட ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
பழச் சாறு என்பது எப்போதாவது ஒரு சுவை மாறுதலுக்காக மட்டுமே செய்ய வேண்டும். 


பம்ப்ளிமாஸ் சுளைகளை மட்டும் தனியாக எடுத்து, சுளையின் மேல் இருக்கும் தோல் நீக்கி, முத்துக்களை மட்டும் தனியாக எடுக்கவும். 




பம்ப்ளிமாஸ் பழச் சுளைகளை, மிக்சியில் போட்டு, நன்கு சுற்றவும். தண்ணீர் விட வேண்டியதில்லை.


                                          பம்ப்ளிமாஸ் பழச் சாறை வடி கட்டவும்.


                                       இனிப்பு தேவைக்கேற்ப  தேன் சேர்க்கவும்.



                                தேனை நன்கு கலந்தால், பம்ப்ளிமாஸ் ஜூஸ் ரெடி.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...