Sunday 27 July 2014

மோர் ரசம்

மோர் ரசம்


முன் காலத்தில் அடிக்கடி வீடுகளில் செய்யப் பட்டு வந்த, இன்று மறந்து போன உணவு பதார்த்தங்களில் ஒன்று இந்த மோர் ரசம். காய்ச்சலால் அவதி படும்போது நாக்கு கசந்திருக்கும். உணவு பண்டங்கள் ருசிக்காது. அப்போது மோர் ரசம் செய்து கொடுப்பார்கள். நாக்குக்கு சுவை தெரியும்.

சளித் தொல்லையால் அவதிப் படுவோருக்கு மோர் ஒத்துக் கொள்ளாது. அவர்களுக்கு மோர் ரசம் செய்து கொடுப்பார்கள். இந்த வகையில் மோர் சத்து உடலில் சேரும்.

உணவு பொருள்கள் எதையும் வீண் செய்ய மாட்டார்கள். இப்போது போல் குளிர் சாதன பெட்டியெல்லாம் கிடையாது. வீட்டில் மீதமாகிப் போன புளித்த மோர் வீண் ஆகாது.... மோர் ரசம் ஆகி விடும்.

மோர் குழம்பை நீர்க்க சாப்பிடுவது போன்ற சுவையில் இருக்கும். சளி, காய்ச்சல் இல்லாத நேரத்திலும் சாப்பிடலாம். ஒருமுறை சாப்பிட்டால் இதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்.

சுட்ட அப்பளம் 
தொட்டுக் கொள்ள எதுவும் தேவைப் படாது. வேண்டும் என்றால் சுட்ட அப்பளத்தோடு, இந்த மோர் ரசத்தை சுவைக்கலாம்.

                                                                                                    
புளித்த மோர் - 2 டம்ப்ளர்

வெந்தயம் - 1/4 ஸ்பூன் 
வர மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன் 
பெருங்காயம் 

மஞ்சள் தூள் 

கருவேப்பிலை 
உப்பு 








பெருங்காயம், அரை ஸ்பூன்  சீரகம், வர மிளகாய், வெந்தயம் இவற்றை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து............... 












பொடிக்கவும்.












புளித்த மோரை நன்கு சிலுப்பி, உப்பு, மஞ்சள் தூள், கருவேப்பிலை இவற்றை சேர்க்கவும். 












வறுத்து பொடித்த பொடியை சேர்க்கவும்.












நன்கு கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.











ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். அதிகம் கொதித்தால் ரசம் கசந்து விடும். 











வாணலியில் எண்ணெய் விட்டு, மீதியுள்ள அரை ஸ்பூன் சீரகம், சிறிது கடுகு போட்டு தாளித்து கொட்டி, மூடி வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.





மோர் ரசம் செய்ய அதிக நேரம் ஆகாது. ஓரிரு நிமிடங்களில் கொதித்து விடும்.

Saturday 26 July 2014

மோர் குழம்பு

மோர்குழம்பு 


புளித்த தயிர் - 2 டம்ப்ளர்

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - அரை ஸ்பூன்

வர மிளகாய் - 10
தேங்காய் துருவல் - அரை ஸ்பூன்
சீரகம் - சிறிது

சேப்பங்கிழங்கு - 8

உ.பருப்பு - அரை ஸ்பூன்
வெந்தயம் - சிறிது

மஞ்சள்  பொடி- 1/4 ஸ்பூன்  தே. எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவைக்கு

கடுகு, கருவேப்பிலை 

குறிப்பு: தாளிக்க கட்டாயம் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும்.

பூசணிக்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு, சுண்டைக்காய் வத்தல் - இவற்றை போட்டும் மோர்க்குழம்பு செய்யலாம். வடை மோர் குழம்பு, பருப்புருண்டை மோர் குழம்பும் செய்வதுண்டு.


மோர் குழம்பு போல, மோர் ரசமும் செய்யலாம்.


இதனை தயிர் குழம்பு என்றுதான் கூற வேண்டும். புளித்த கெட்டியான தயிரில்தான் செய்கிறோம். ஆனாலும் மோர் குழம்பு என்ற பெயரே நிலைத்து விட்டது. சிலர் மோர் பயன்படுத்தியும் செய்கிறார்கள். ஆனால் குழம்பு கெட்டியாக இல்லாமல் நீர்க்க இருக்கும்.



து. பருப்பையும், க.பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

உ.பருப்பையும், வெந்தயத்தையும் சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்.





ஊறிய பருப்புகளுடன் வறுத்த வெந்தயம், உளுத்தம்பருப்பு, தேங்காய், வர மிளகாய், சீரகம்  இவற்றை சேர்த்து .........










சிறிது தண்ணீர் விட்டு......












மைய அரைக்கவும். அதிக கொரகொரப்பாகவோ  அல்லது அதிக நைசாகவோ  அரைக்க கூடாது.






                                          தயிரை நன்கு சிலுப்பவும். கெட்டியாக மோர்குழம்பு வேண்டுபவர்கள், தயிரை அப்படியே சிலுப்பலாம். மோர்குழம்பு  சற்றே நீர்க்க இருந்தால்தான் பிடிக்கும் என்பவர்கள் அரை தம்ப்ளர் தண்ணீர் சேர்த்து சிலுப்பலாம்.









சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, வில்லை வில்லையாக  நறுக்கி................... 











சிலுப்பிய தயிரில் சேர்க்கவும். 








சிலுப்பிய தயிரில் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் போட்டு................


                                       அரைத்த கலவையை கலந்து விடவும்.



இந்த கலவையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியை போட்டு கை விடாமல் கிளறவும். அசந்தால் அடி பிடித்து விடும்.


                                  ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். புகை வந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு, கருவேப்பிலை போட்டு வெடித்து வரும் போது, குழம்பில் கொட்டி தட்டை போட்டு பத்து நிமிடம் மூடவும்.


சுட்ட அப்பளம் 



மோர் குழம்பு சாதமும்....வாழைப் பூ பருப்பு உசிலியும் 
மோர் குழம்பை சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம், உருளை கிழங்கு வதக்கல், வாழைக்காய் வதக்கல், வாழைக்காய் சிப்ஸ், பீன்ஸ் அல்லது வாழைப் பூ பருப்பு உசிலி  ஆகியவை மோர் குழம்பு சாதத்திற்கு தொட்டு சாப்பிட ஏற்றவை. குறிப்பாக வாழைப்பூ பருப்பு உசிலியும், மோர் குழம்பு சாதமும் சூப்பர் காம்பினேஷன்.

இட்லிக்கு மோர்  குழம்பு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். சுடச்  சுட மல்லிப் பூ போன்ற இட்லியை  தட்டில் போட்டு, மோர் குழம்பில் முக்கி எடுத்து சாப்பிடுங்கள். அருமையான சாப்பாட்டு அனுபவம் கிடைக்கும். சாம்பார் இட்லியை விடவும் உன்னத சுவை கொண்டது மோர் குழம்பு இட்லி.

Wednesday 16 July 2014

ஆடிப் பால்

ஆடிப் பால்  








முற்றிய தேங்காய் - 1
ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 கப் 
வெல்லம்







"தேங்காய் பால் பிழிவது எப்படி?" என்று தனியாக கொடுத்துள்ளேன்.

மூன்று முறை பிழிந்த தேங்காய் பால்
ஒன்றாக கலந்து.....




முற்றின தேங்காயை துருவிக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து, 2 டம்ப்ளர் தண்ணீர் விட்டு, மிக்சியில் போட்டு, நன்கு அரைக்கவும். அரைத்த தேங்காயை வடிகட்டியில் போட்டு, நன்கு பிழியவும். பின் மீண்டும் தேங்காயை மிக்சியில் போட்டு, 1 டம்ப்ளர் நீர் விட்டு, அரைத்து, மேலே சொன்னது போல் பால் பிழியவும். 


இவ்வாறு மூன்று முறை பிழிந்தவுடன், மூன்று தர தேங்காய் பாலையும் ஒன்றாக சேர்த்து,அடுப்பில் வைத்து, வெல்லம் சேர்த்து, அடுப்பை simல் வைத்து கிளறவும். லேசாக நுரைத்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும். 


சிலர் அரை ஸ்பூன் அரிசியை ஊறவைத்து, தேங்காயுடன் சேர்த்து அரைப்பதுண்டு. பால் திக்காக இருக்கும். ஆனால் taste கொஞ்சம் மட்டம்தான்.
 அடுப்பில் வைத்து,
சூடேறியதும்.....

சிலர் வெல்லத்திற்கு பதில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பார்கள். ஆனால் வெல்லத்தின் சுவையும், ஆரோக்கியமும் சர்க்கரையில் வராது.

வெல்லம் சேர்த்து...........







ஆடி அழைத்து வரும் என்பது நமது நம்பிக்கை. பண்டிகை சீசனின் முதல் பண்டிகை ஆடி 1. ஆடி பதினெட்டு, ஆவணி அவிட்டம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை  என்று ஆடி முதல் நாள் பண்டிகையை தொடர்ந்து பண்டிகைகள் வரிசை கட்டி வரும். 

அடுப்பை simல் வைத்து.....
கிளறி.......








ஆடி முதல் நாளில் வடை, அப்பளம், மோர்குழம்பு, பச்சடி என்று அமர்க்களமான விருந்து சாப்பாடு செய்வார்கள். பாயசத்திற்கு பதில் ஆடிப் பால் செய்வார்கள். 

திருமணமான முதல் வருடம் வரும் ஆடி முதல் நாளில் புது மண தம்பதியினரை பெண் வீட்டிற்கு அழைத்து, விருந்து வைத்து, ஆடிப் பாலை வெள்ளி டம்ப்ளரில் தருவார்கள். 

லேசாக நுரைத்தவுடன் அடுப்பை அணைக்கவும். 

Sunday 13 July 2014

தேங்காய் பால்

தேங்காய் பால்



ஒரு தேங்காயும், இரண்டு  டம்ப்ளர் தண்ணீரும் எடுத்துக் கொள்ளவும். தேங்காயை உடைத்து, துருவிக் கொள்ளவும். 

துருவிய தேங்காயை மிக்சியில் போட்டு லேசாக சுற்றவும். 

தேங்காய் துருவல் ஓரளவு மசிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு சுற்றவும். இரண்டு டம்ப்ளர் தண்ணீர்  சேர்த்து சுற்றியபின், மசிந்த கலவையை எடுத்து வடிகட்டவும். ஒருமூடி தேங்காய் துருவலுக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் என்ற கணக்கில் இரண்டு டம்ப்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இது முதல் தரமான கெட்டி தேங்காய் பால்.


வடிகட்டியபின் மிஞ்சும் தேங்காய் துருவல் சக்கையுடன் மீண்டும் ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து, மிக்சியில் போட்டு நன்கு சுற்றவும். மசிந்தவுடன் வடிகட்டவும். இது இரண்டாம் தர தேங்காய் பால்.

திரும்பவும் மிஞ்சும் தேங்காய் துருவல் சக்கையுடன் இன்னொரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து, மிக்சியில் சுற்றி வடிகட்டவும். இது மூன்றாம் தர தேங்காய் பால்.




வடிகட்ட வேண்டிய தேங்காய் பால் (வலது)


முதல் தர தேங்காய் பால் ரெடி 
முதல்தர தேங்காய் பால் மட்டுமே படங்களில் காட்டப் பட்டுள்ளது.

தேங்காய் அதிகம் விளையும் கேரளப் பகுதிகளில் சமையலில் தேங்காய் பால் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக அட பிரதமன், கடலை பருப்பு பிரதமன், பாசிபருப்பு பாயசம், கேரளா ஸ்டைல் stew ஆகியவற்றில் தேங்காய் பால் பயன்படுகிறது. அட பிரதமன் போன்ற கேரளா ஸ்டைல் பாயசங்கள்  செய்ய தேங்காய் பால் பிழியும் போது, முதல் பால் எடுக்க மிகக் குறைவான தண்ணீரே சேர்ப்பார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் பால் எடுக்க சற்று அதிகமான தண்ணீர் சேர்க்க வேண்டும்.

பால் பணியாரம், பால் கொழுக்கட்டை, கூட்டு, குருமா ஆகியவை செய்யவும்  தேங்காய் பால் பயன்படுகிறது .

 
வெந்தய தோசையும்...வெல்லம்
சேர்த்த தேங்காய் பாலும் 

ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இனிப்பு சேர்த்த தேங்காய் பால் சிறந்த side dish ஆகிறது.

தேங்காய் பால் சாதம் செய்வதுண்டு.

 தேங்காய் பாலில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து, ஆடி முதல் நாளில் ஆடிப் பால் செய்வார்கள். 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...