Monday 14 April 2014

நஞ்சு கொண்டான் கீரை கூட்டு

நஞ்சு கொண்டான் கீரை கூட்டு 
            

 நஞ்சு கொண்டான் கீரை, நச்சு கொட்டை கீரை, லச்ச கெட்ட கீரை , நஞ்சுண்டான் கீரை என பல பெயர்களில் அழைக்கப் படும் இந்த கீரை மூட்டு வலியை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. சிறு மரமாக வளரும். இலைகள் பெரிதாக இருக்கும். நகரங்களில் இதை அலங்கார மரமாக வளர்க்கிறார்கள். வீட்டின் முன்னால் சில நச்சு கொட்டை மரங்களை வைத்து வளர்த்தால், நிறைய வெளிர் பச்சை நிற இலைகளுடன் வீட்டிற்கு தனி அழகை தரும். இந்த மரத்தை வீட்டில் வைத்திருக்கும் பலருக்கும் இதன் மருத்துவ குணம் தெரிவதில்லை. இதன் கீரை சமையலில் சேர்த்துக் கொள்ள தகுந்தது என்பதே பலருக்கும் தெரிவதில்லை. என் நண்பர் திரு. சுந்தரம் நச்சு கொட்டை இலைகளில் மதிய உணவை pack செய்து கொண்டுவருவார். முதன் முதலில் அவர் சொல்லித் தான் எனக்கு இந்த கீரையின் மகத்துவம் தெரிந்தது.


'நஞ்சு கொன்றான் கீரை' என்பது 'நஞ்சு கொண்டான்' என மருவியிருக்கலாம். கிராமங்களில் 'லச்ச கெட்ட கீரை' என்கிறார்கள். இந்த பெயரும், 'நச்சு கொட்டை' என்ற பெயரும் எப்படி வந்தது என தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தாலும் இது பயனுள்ள கீரை என்பதில் மாற்று கருத்தில்லை.


இந்த கீரையில் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம். கீரை மசியல் (கடைசல்)  செய்யலாம். நச்சு கொட்டை கீரையில் உப்பு, புளி, மிளகாய் , துவரம் பருப்பு சேர்த்து துவையல்  செய்யலாம். சுருக்கமாக சொன்னால் நாம் மற்ற கீரைகளை பயன்படுத்தி என்ன சமையல் செய்வோமோ அத்தனையும் நச்சு கொட்டை கீரையில் செய்யலாம். 

பொதுவாக கிராமத்தில் வசிப்பவர்களை கேட்டால் இந்த கீரை பற்றி நிறைய சொல்கிறார்கள்.

இது மரமாக வளர்ந்தாலும், பலம் இல்லாதது. எளிதில் உடைபடக் கூடியது. கனம் இல்லாதது. நிறைய இடம் தேவைப் படாது. எனவே வீட்டிற்கு ஒரு நச்சு கொட்டை மரம் எளிதில் வளர்க்கலாம். இதன் கிளையை உடைத்து நட்டாலே வளர்ந்து விடும்.

தவசிக் கீரை, நஞ்சு கொண்டான் கீரை போன்று பல கீரைகள் இன்றைய சமையலில் இடம் பெறுவதில்லை. இத்தகைய கீரைகளை ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் சுவையும், மருத்துவ குணமும் உங்களை மீண்டும் மீண்டும் அவற்றை பயன் படுத்த தூண்டும். 



கைப்பிடி அளவு பாசி பருப்பை ஊற வைக்கவும்.






நஞ்சு கொண்டான் கீரைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்யவும்.










வெற்றிலையில் நரம்பை கிள்ளி எறிவது  போல், இந்த கீரையிலும் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட வேண்டும். கத்தியால் கீறி விட்டு நரம்பை எடுத்து விடலாம்.










நரம்பு நீக்கிய கீரையை, பொடிப் பொடியாக நறுக்கவும்.











பாசி பருப்பு, நறுக்கிய நச்சு கொண்டான் கீரை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.











கீரை நன்கு மசிந்ததும்...........












மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு போட்டு................












சாம்பார் பொடி வாசனை மாறும்வரை கொதிக்க விடவும்.










சாம்பார் பொடியின் பச்சை வாசனை மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும். 

நஞ்சு கொண்டான் கீரை கூட்டு ரெடி.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

மிகவும் பயனுள்ள தகவல்...மிகவும் நன்றி...

Unknown said...

Thank you for your useful information

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...