Monday 18 November 2013

வலைபதிவுகளும் அறிவுசார் சொத்துரிமையும்



இன்று அறிவுசார் சொத்துரிமை பற்றி அதிகம் பேசப் படுகிறது. அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

அறிவுசார் சொத்துரிமையை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.

முதலில் வருவது, காப்புரிமை அல்லது பதிப்புரிமை (Copyright). எழுத்தாளர்களின் படைப்புகள், இசை படைப்புகள், ஓவியங்கள், சிற்பங்கள், கணினி மென்பொருளாக்கம், திரைப்படம் ஆகியவற்றிற்கு காப்புரிமை உண்டு. படைப்பாளர் இறந்து 5௦ ஆண்டுகள் வரை காப்புரிமை அமலில் இருக்கும்.

இரண்டாவதாக வருவது தொழில்சார் சொத்துரிமை (industrial property right). Trademark, Logo, தொழில் ரகசியங்கள் (உதாரணத்திற்கு coca  cola வின் formula), புதிய கண்டுபிடிப்புகள், புவிசார் குறியீடு (Geographical Indication) ஆகியவை தொழில்சார்  சொத்துரிமையில் அடங்கும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமை (Patents), பொதுவாக, 20 வருடங்களுக்கு அளிக்கப் படுகிறது.

படைப்பாளி, வணிக நிறுவத்தினர் ஆகியோரின் உரிமையை பாதுகாக்கவும், புதிய படைப்புகள், முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த உரிமைகள் தரப்படுகின்றன.

இதில் புவிசார் குறியீடு (Geographical Indication) ஒரு சுவாரசியமான விஷயம். உணவு பிரியர்களுக்கு அதில் நிறையவே சுவாரசியங்கள் உண்டு. அதை பற்றி விரிவாக அடுத்த ஒரு postல் காண்போம்.

இப்போது, எழுத்தாளர்களின் உரிமை பற்றி சில கருத்துக்கள்.

எழுத்தாளர்களின் உரிமை அதிகம் பறிபோவது இணையத்தில்தான் என்பது என் கருத்து. இணையத்தில் புகுந்து ஒரு தகவலை தேடினால், ஒரே விஷயங்கள், கருத்துக்கள், recipe கள் வரி மாறாமல் பலரது பெயர்களில், பல இணைய தளங்களில் கிடைக்கின்றன. மணிக் கணக்காக தேடியிருப்போம். ஆனால் கொஞ்சம் தான் புதிய செய்தி கிடைத்திருக்கும்.

ஒரே தகவல் ஏன் பல இடங்களில் பதிவு செய்யப் பட வேண்டும்? இணையத்தில் எல்லாமே இலவசம் என்பதாலா?

பல இடங்களில் இருப்பதால் அந்த கருத்து வேகமாக பரவுகிறது. உண்மைதான். ஆனாலும் கிடைக்கும் தகவல்களின் நம்பக தன்மை போய் விடுகிறது.

வலைப்பூ (Blog) பதிவர்களுக்கு (Bloggers) இந்த அறிவுசார் சொத்துரிமை திருட்டு நன்கு பழகிய  விஷயம். பலர் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதுமில்லை.

அறிவுசார் திருட்டுகளை இணையத்தில் தடுக்க முடியாது என்பது பலரது கருத்து. ஒரு வலைப் பதிவில், " எனது எழுத்துக்களை வரி மாறாமல் அப்படியே எடுத்து பதிவு செய்பவர்கள் சொல்லி விட்டு செய்யவும்" என்ற ரீதியில் ஓர் அறிவிப்பை கொடுத்திருந்தார் அந்த வலை பதிவர்.

சில தினங்களுக்கு முன் எனக்கு அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டது. இணையத்தில் உலா  வந்தபோது 'தலைவாழை விருந்து' blogல் நான் எழுதிய 'குப்பைமேனி தைலம்' போஸ்ட் வரி மாறாமல், படங்கள் உள்பட வேறொரு வலைப்பதிவில் (http://beautytipsinherbalproducts.blogspot.in/2013/11/blog-post_6.html) வெளியாகி இருந்தது.

எனது கண்டனத்தை அந்த வலை தளத்தில் பதிவு செய்தேன். அந்த வலை பதிவரின் G+ பக்கத்திலும் என் கண்டனத்தை பதிவு செய்தேன்.

இப்போது அந்த ஆட்சேபனைக்குரிய வலைப் பதிவு நீக்கப் பட்டு விட்டது. வலைப்பதிவர் தனது G+ பக்கத்தில்,  வலது புறத்தில் காணப் படும் Sorry messageயை இன்று (18/11/2013) post செய்திருக்கிறார்.

இணைய படைப்பாளர்கள் தங்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நமது சிறிய கண்டனம் நாளை பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.

அதற்காக தான் இந்த கட்டுரை.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...