Sunday 17 November 2013

கார்த்திகை நெல்பொரி உருண்டை

நெல்பொரி உருண்டை





நெல்பொரி - 1 கிலோ 
வெல்லம் - 1/2 கிலோ 
ஏலக்காய் - சிறிது 
தேங்காய் அல்லது பொட்டுக் கடலை - சிறிது 









நெல்பொரியை  சுத்தம் செய்யவும். உலர்ந்த பாத்திரத்தில் சுத்தம் செய்த நெல்பொரியை போடவும்.

வெல்லத்தை பாகு வைக்கவும். 

தேங்காயை பல்லு, பல்லாக கீறி போடவும். அல்லது சிறிது பொட்டுக் கடலை போடவும். தேங்காயோ, பொட்டுக் கடலையோ, பாகு கொதிக்கும் முன் சேர்க்க வேண்டும்.

பாகு கம்பி பதத்திற்கும் அதிகமாக முறுக வேண்டும்.

பாகு நன்கு முறுகியதும், நெல்பொரியில் கொட்டி, நன்றாக  கிளறவும். தாமதம் இல்லாமல் கிளற வேண்டும். இல்லை எனில், பாகு இறுகி விடும்.


பாகு பொரியில் முழுவதும் கலந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.



சூட்டோடு பிடித்தால்தான் உருண்டை பிடிக்க முடியும். ஆறினால் இறுகி விடும். கையில் ஒட்டாமல் இருக்க சிறிது அரிசி மாவை தொட்டு உருண்டை பிடிக்கலாம்.



சூட்டோடு உருண்டை பிடிக்க வேண்டும். கையில் சுட்டுக் கொள்ளவும் கூடாது. அதுதான் நெல்பொரி உருண்டை பிடிப்பதில் சவால்.





















நெல்பொரி உருண்டை 

நெல்பொரி உருண்டை 

நெல்பொரி உருண்டை 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...