Saturday 18 January 2014

கனு பொங்கலும்....காணும் பொங்கலும்....

காணும் பொங்கல் அன்று சென்னை மெரினாவில் இளைஞர்களின் கானா கொண்டாட்டம் 

பொங்கல் ஒரு நெடிய பண்டிகை. தை முதல்நாள் பொங்கல், அதற்கு முதல்நாள் போகி, பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல், கனு பொங்கல், அதற்கடுத்த நாள் சென்னையில் காணும் பொங்கல் .....இப்படி நீளும் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள். சகோதரர் நலன் வேண்டி, சகோதரிகள்  காக்கைகளுக்கு கலர் கலராக கலந்த சாத வகைகள், இனிக்கும் பொங்கல், பழங்கள், தேங்காய் இப்படி விதம் விதமான படையல் வைத்து வழி படுவர். மஞ்சள் கொத்து இலைகளில் வைக்கப் பட்டிருக்கும் இந்த கனு படையல் ஒரு கண்கொள்ளா காட்சி. திருமணமான பெண்களுக்கு அம்மா வீட்டிலிருந்து கனுசீர் கொடுக்கும் வழக்கம் உண்டு.  ஆயிரம்  ஆயிரமாக கணவன் சம்பதித்துக் கொடுத்தாலும் அம்மா  வீட்டில் இருந்து வரும்  கனுசீர் பணத்திற்கு பெண்கள் கொடுக்கும் மரியாதையே தனி
சகோதரருக்காக சகோதரிகள் வைக்கும் கனுபிடி  காக்கா பிடி

கனுவிற்கு அடுத்த நாள், வழக்கமாக பீச் செல்லும் சென்னை வாசிகள் வீட்டில் அடைந்து கிடக்க, வெளியூர் வாசிகள் சென்னை மெரீனா, வண்டலூர், கேளிக்கை பூங்காக்கள் என்று அனைத்து இடங்களிலும் கூடி கொண்டாடுவர். கட்டு சாத கூடை, கானா பாட்டு என்று ஊரெங்கும் கொண்டாட்டம்தான். சென்னை மெரினாவில் கண்ட காணும் பொங்கல் காட்சிகளின் படப் பதிவு இதோ:

காணும் பொங்கல் காண வந்திருக்கேன்...
இங்கே வந்து சாப்பிட்டால்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கு...
கட்டு சாதம் 





கிளி ஜோசியம் 



இந்த வருடம் கூட்டம் அதிகமில்லை ...





No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...