Saturday 18 January 2014

மைலாப்பூர் உணவு திருவிழா

மைலாப்பூர் உணவு திருவிழாவில் கட்டுக் கடங்காத கூட்டம்            PHOTO: Srividya Raman


சென்னையில் மைலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி ...இந்த பகுதிகளை தனி நகரங்கள் என்றே கூறலாம்.  இவற்றுக்கு தனி கலாசாரம், வரலாறு உண்டு. பழமையும், புதுமையும் கைகோர்த்து செல்லும் பகுதிகள் இவை. மயிலையில் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், மேற்கு மாம்பலத்தில் காசி விஸ்வநாதர்...இப்படி இவற்றை கோயில் நகரங்கள் எனலாம்.


ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மயிலை கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளும் களை கட்டும். பத்திரிக்கையாளர் வின்சன்ட் டி சௌசா முயற்சியில் துவங்கிய ,சுந்தரம் ஃபைனான்ஸ் ஆதரவில் நடக்கும் மைலாப்பூர் பெஸ்டிவல் பற்றி குறிப்பிடுகிறேன். 12 வருடங்களாக தொடர்ந்து நடக்கும் இந்த திருவிழா, மயிலையின் கலாசார அடையாளமாக மாறிவருகிறது. வருடா வருடம் இந்த திருவிழாவின் பிரமாண்டம் அதிகரித்து வருகிறது.

மயிலை வடக்கு மாட வீதியில் கோல போட்டி PHOTO: Srividya Raman

நிகழ்ச்சிகள் அனைத்துமே திறந்த வெளிகளில் நடப்பது இதன் சிறப்பு. வடக்கு மாட வீதியில் கோல போட்டி, கபாலீஸ்வரர் சன்னதி தெருவில் தினசரி பாரம்பரிய  நிகழ்வுகள், பிச்சு பிள்ளை தெருவில் ஓவியரின் கைவண்ணங்கள் , நாகேஸ்வர ராவ் பூங்காவில் அதி காலை நேர சிறுவர் இசை கச்சேரிகள் என்று நான்கு நாட்களுக்கு அமர்க்களப் படும் மைலாப்பூர்.
சன்னதி தெருவில் ....       PHOTO: Srividya Raman
இந்த வருடம் ஜனவரி  9,10,11,12 தேதிகளில் நடந்தது மைலாப்பூர் திருவிழா.

                                                                                        PHOTO: Srividya Raman
மைலாப்பூர் திருவிழாவின் முக்கிய பகுதி உணவு திருவிழா. நான்கு நாட்களும் தற்காலிக உணவு ஸ்டால்கள் இயங்கும். ஒரு நாள் மதியம் மைலாப்பூரில் குறிப்பிட்ட நான்கைந்து வீடுகளில் இலை சாப்பாடு உண்டு.  யாரோ முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டிற்கு சென்று சாப்பிடும் அனுபவம் அது. முன்பதிவு அவசியம். இந்த வருடம் இலை சாப்பாட்டிற்கு கட்டணம் 150  ரூபாய்.


சுந்தரேஸ்வரர் தெருவில் உணவு ஸ்டால்கள் அமைக்கப் பட்டிருந்தன. நூற்றுக் கணக்கான ஸ்டால்கள்...பல நூறு வகை உணவுகள்...பஞ்சு மிட்டாயும் உண்டு. சிறுவர் ராட்டினமும் உண்டு. மர பொருள்கள் விற்பனை வண்டி கண்ணை கவர்ந்தது. பாசி பருப்பு பாயசம், கத்தரிக்காய் போண்டா, பால் கொழுக்கட்டை  கிடைத்தன.

பிரமாண்டமும், கூட்டமும் இருந்தாலும் பொருட்காட்சி உணவக உணர்வு ஏற்பட்டது ஒரு குறையே. டெல்லி அப்பளம் கூட விற்றார்கள். எந்த ஸ்டால் சென்றாலும்  உணவுகள் தரமாக இருக்கும் என்ற உத்தரவாதமில்லை.




வீட்டில் தயாரித்த நமது பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்திருக்கலாம். அதே நேரத்தில் பொடி இட்லி, அம்மிணி கொழுக்கட்டை, ரச வடை  போன்ற எளிய, இனிய உணவுகளும் கிடைத்தன. உணவு விலை குறைவு தான். பிச்சு பிள்ளை சந்தில் இரண்டு உணவு கடைகளில் home made food கிடைத்தன.

மொத்தத்தில் திருவிழாவிற்கு சென்ற குழந்தையின் குதூகல மனதோடு வீடு திரும்பினோம்.




அம்மிணி கொழுக்கட்டை 
வாழைப் பூ வடை 


பொடி இட்லி 




























மர பொருள் விற்பனை...


























படங்கள்: Srividya Raman

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...