Thursday 12 December 2013

வாழைப்பூ பருப்பு உசிலி

வாழைப் பூ பருப்பு உசிலி



துவரம் பருப்பு - 100 கிராம் 


வர மிளகாய் (நீள மிளகாய்) - 8


சீரகம் 


கடலை பருப்பு - 2 ஸ்பூன் 


பெருங்காயம் 


உப்பு 





வாழைப்பூ (நடுத்தர அளவில்) - 1





வாழைப் பூவை, காளான் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கி, மோரில் போடவும்.

நறுக்கிய வாழைப் பூவை, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும், ஒரு வடி தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும்.

துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒன்றாக போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.  ஒன்றரை மணி  நேரம்,    ஊற வைக்க  வேண்டும்.

ஊறிய பருப்பில் தண்ணீர் வடித்து, உப்பு, வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து கர கரவென்று அரைக்கவும்.

அரைத்த பருப்பை பத்து நிமிடங்களுக்கு, குக்கரில் விசில் போடாமல் வேக வைக்கவும்.


வேக வைத்த பருப்பு சற்றே இறுகலாக இருக்கும். அதை கைகளால் உடைத்து உதிர்த்து விடவும்.

வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து, உளுத்தம் பருப்பு சிவந்ததும், சீரகத்தையும்  போட்டு பொரிக்கவும்.

உதிர்த்து வைத்த பருப்பை வாணலியில் போட்டு, நன்கு கிளறவும். பருப்பு ஓரளவிற்கு உதிரியானதும், வாழைப் பூவை துளி கூட தண்ணீர் இல்லாமல் ஓட்ட பிழிந்து, பருப்போடு சேர்த்து கிளறவும். பொல பொல வென்று வரும் வரை கிளற வேண்டும். மூன்று நிமிடங்கள் கிளறினாலே பொல பொல வென வந்து விடும்.

அடுப்பை அணைத்து இறக்கவும்.



வாழைப்பூ பருப்பு உசிலி ரெடி.

வாழைப் பூ
வாழைப் பூ
                  
வாழைப் பூ ஆய்ந்தது 

வாழை மடல் மீது ஆய்ந்த வாழைப் பூ
வாழைப் பூவில் காளான் நீக்கி 
வாழைப் பூவில் இருந்து நீக்கிய காளான் 
காளான் நீக்கப் பட்ட வாழைப் பூ 
வாழைப் பூவை பொடிப் பொடியாக நறுக்கி...
நறுக்கிய வாழைப் பூ
வேக வைத்த வாழைப் பூ 
இனி பருப்பு உசிலி செய்வோம்.


துவரம் பருப்பு + கடலை பருப்பு -ஊற வைத்து...

மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து ...
கொர கொர வென அறைத்து ...


அறைத்த பருப்பு+மிளகாய் ஆவியில் வேக வைத்து  ...
ஆவியில் வெந்த பருப்பு+மிளகாய் உதிர்த்து...
பருப்பு உசிலி ரெடி.  இனி  வாழைப்பூ .....



தாளித்து...



பருப்பு உசிலி சேர்த்து.......
வேக வைத்து, தண்ணீர் இல்லாமல் ஒட்ட பிழிந்த வாழைப்பூ வும் சேர்த்து .....
வாழைப் பூ  பருப்பு உசிலி ரெடி
பெண்களின் கர்ப்பப் பை ஆரோக்கியத்திற்கு உகந்தது வாழைப் பூ. வயிற்றுப் புண் வராமலும் தடுக்கும். வாழைப் பூ பயன் படுத்தி, வாழைப் பூ பருப்பு உசிலி, வாழைப் பூ பொறியல் வாழைப் பூ கூட்டு, வாழைப் பூ வடை, வாழைப் பூ அடை  ஆகியவை செய்யலாம். வாழைப் பூ ஆய்ந்த பின், அதன் கடைசி பகுதி மிகவும் இளசாக (பூம்பிஞ்சு) இருக்கும். இதை வாழைப் பூ கூச்சு என்பார்கள். இந்த வாழைப் பூ கூச்சை அப்படியே சாப்பிடலாம். லேசாக துவர்க்கும். ஆனால் உடல் நலத்திற்கு மிக நல்லது.




மோர்குழம்பு சாதம், எலுமிச்சை பழ ரசம் சாதம் ஆகியவற்றுடன், தொட்டுக்  கொண்டு சாப்பிட பெஸ்ட் சாய்ஸ் வாழைப் பூ பருப்பு உசிலி.

பருப்பு உசிலி இன்னொரு முறையிலும் செய்யலாம். ஊற வைத்து அறைத்த பருப்புகளை நிறைய எண்ணெய் விட்டு வாணலியில் போட்டு வதக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன் வாழைப் பூவை சேர்க்க வேண்டும். இந்த முறையில் பருப்பு நிறைய எண்ணெய் குடிக்கும். நேரமும் அதிகமாகும்.

வாழைப் பூ பருப்பு உசிலி

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...