Wednesday 25 December 2013

உப்பு புளி தோசை

உப்பு புளி தோசை
உப்பு புளி தோசை நல்ல உறைப்பாக, கர கரவென்று  நம்ம ஊர் அடை போல், ஆனால் அடையை விட மெல்லியதாக இருக்கும். தோசைக்கு பெயர் போன உடுப்பி  பகுதியின் சிறப்பு உணவு உப்பு புளி தோசை. ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில், மவுன்ட் பேட்டன் மணி ஐயர் கேண்டீனில் இந்த வருட சிறப்பு அறிமுகம் உப்பு புளி தோசை. சாப்பிட்டு பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. ஆறிய பிறகு கூட ருசி மாறாமல் இருப்பது இதன் சிறப்பு.


தேவையான பொருள்கள் 

பச்சை அரிசி  - 1 டம்ப்ளர் 
வெந்தயம் - 1 ஸ்பூன் 
தேங்காய்  - 1/2 மூடி (துருவியது)
புளி  - சிறிய  எலுமிச்சை அளவு.
தனியா  - 4 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
வர மிளகாய்  - 8 
உப்பு  - தேவைக்கு 

எப்படி செய்வது?

அரிசி, வெந்தயம் இரண்டையும்  நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். புளியை கரைத்து கொள்ளவும். புளி கரைக்க மிக குறைந்த தண்ணீர் விட்டு, கெட்டியாக கரைக்கவும். தேங்காய், வர மிளகாய், தனியா, சீரகம் - இவற்றை ஒன்றாக போட்டு அறைக்கவும். இந்த அரைத்த கலவையுடன், புளி கரைசல், ஊற வைத்த அரிசி, வெந்தயம் இவற்றையும் போட்டு நன்கு அறைக்கவும். உப்பு சேர்க்கவும்.

இந்த மாவு புளிக்க வேண்டியதில்லை. அறைத்த உடனே தோசை ஊற்றலாம். விரும்பினால் கால் தம்ப்ளர் உளுத்தம் பருப்பு சேர்த்து அறைக்கலாம். உடுப்பி பகுதியில் சிறிது வெல்லமும் சேர்த்து அறைப்பார்கள்.

1 comment:

Anonymous said...

It makes me really feel hungry.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...